பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாகிஸ்தான் பிரதமராகப் பதவியேற்றுள்ள இம்ரான் கானுடன், தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். Ranil Wickramasinghe Wishes Pakistan Prime Minister Imran Khan Tamil News
நேற்று தொலைபேசி மூலம், தொடர்பு கொண்ட பிரதமர், பாகிஸ்தான் பிரதமராகப் பதவியேற்றுள்ளமைக்கு, இம்ரான் கானுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
இந்த தொலைபேசி உரையாடலின் போது, இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும், பரஸ்பர நலன்கள் சார்ந்த விடயங்களில் இரு நாடுகளும் இணைந்து பணியாற்றுவது அவசியம் என்றும் சிறிலங்கா பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
தமக்கு வாழ்த்துத் தெரிவித்த சிறிலங்கா பிரதமருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்ட பாகிஸ்தான் பிரதமர், இரண்டு நாடுகளும் பலமான, நட்புறவைக் கொண்டுள்ளன என்றும், அரசியல், பொருளாதார, பாதுகாப்பு மற்றும் சுற்றுலா உட்பட அனைத்து துறைகளிலும் இருதரப்பு உறவுகளை வளர்த்துக் கொள்ள வேண்டிய தேவை உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, நேற்று முன்தினம் பாகிஸ்தான் பிரதமராகப் பதவியேற்ற இம்ரான் கானுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாழ்த்துச் செய்தியை அனுப்பி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- மஸ்கெலியாவில் 80 பேர் வெளியேற்றம்; மரம் முறிந்து விழும் ஆபத்தில்
- வெள்ளநீரில் மூழ்கியுள்ள பொகவந்தலாவ கெர்க்கஸ்சோல்ட் தோட்ட வீதி
- இரத்த தானம் வழங்கியவர்களுள் 30 பேருக்கு எயிட்ஸ்; அதிர்ச்சித் தகவல்
- மனைவியை முச்சக்கரவண்டியில் பலவந்தமாக கடத்திய கணவன்
- இரண்டாவது நாளாக தொடர்கிறது பெண் கைதிகளின் போராட்டம்
- செஞ்சோலை படுகொலையின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று
- போலியான ஆவணங்களைத் தயாரித்து பண மோசடி செய்த நபர் கைது
- உலகின் அதிசிறந்த, மிகவும் மோசமான நகரம்; கொழும்பு 130 ஆவது இடத்தில்
- இந்தியாவின் கழிவுப் பொருட்களால் இலங்கையில் மீன் வளங்கள் அழிந்து போகும் அபாயம்