சிறைக் காவலர்களுக்கான பதவிக்காக இணைத்துக்கொள்ளும் புள்ளி மட்டத்தை அதிகரிப்பதற்கு அமைச்சு கொண்டு வந்துள்ள தீர்மானத்தால், குறித்த பதவிக்காகத் தெரிவு செய்யப்பட்ட 900 பேருக்கு அதிகமானோர் பதவி இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Sri Lanka Jail Guards Appointments Under Problem Tamil News
மேலும் சிறைச்சாலைகள் திணைக்களத்துக்கும், நீதிமன்றம் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சுக்குமிடையில் தோன்றியுள்ள முறுகல் நிலை காரணமாக, ஆயிரத்து 184 சிறைக் காவலர்களுக்கான வெற்றிடங்களுக்கு நியமனங்கள் வழங்குவதில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கடந்த ஜுலை மாதமே புதிய சிறைக் காவலர்களுக்கான நியமனங்கள் வழங்கத் தீர்மானித்திருந்த போதிலும், ஆள்சேர்ப்பு நடைமுறைக்கு அமைய, உயர் புள்ளிகள் பெறாதவர்களுக்கு 27- 32 க்கிடையில் புள்ளிகளைப் பெற்றுக்கொடுத்து, இந்த பதவிக்கு தகுந்தவர்களை நியமித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
எனினும், 40 புள்ளிகளுக்கு அதிக புள்ளிகளைப் பெற்றவர்களை இணைத்துக்கொள்ள நீதிமன்றம் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அரச பணிகள் ஆணைக்குழுவிடம் அனுமதி கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- சகோதரருக்கு இடையில் வாய்த்தர்க்கம்; பொல்லால் தாக்கி ஒருவர் பலி
- வடமாகாண அமைச்சர்கள் பதவி விலக வேண்டும்; ஆளுநர்
- ஓட்டுநர்களின் தொழில் அபாயத்தில்; பேரூந்து ஓட்டுநர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில்
- 108000 மில்லிகிராம் கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது
- தனியார் பேரூந்துகளில் தொலைக்காட்சி பெட்டிகளுக்கு தடை
- கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் கொலை
- தாமரைத் தடாகத்தில் ஏழு வயது சிறுமி வீழ்ந்து பலி
- வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன் கைது
- பாம்பன் பாலத்தில் ஆயுதம் ஏந்திய பொலிஸார் பாதுகாப்பு பணியில்