இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 400 யை நெருங்கியுள்ளது. மேலும், லாம்போக் தீவிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. island’s height rose Indonesia’s earthquake tamil news
லாம்போக் தீவில் சமீபத்தில் 2 தடவை நிலநடுக்கம் ஏற்பட்டது. முதலில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் 17 பேர் உயிரிழந்தனர். 2-வது நில நடுக்கம் 6.9 ரிக்டர் அளவில் பதிவானது. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து 100-க்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் அவ்வப்போது உருவாகி மக்களை அச்சுறுத்தின. ஆயிரக் கணக்கான வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமாயின. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். இடிபாடுகளை அகற்றி இறந்தவர் உடல்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
லாம்போ தீவில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்படுவதால் அந்த தீவு வழக்கத்தை விட 25 செ.மீ. அதாவது 10 இஞ்ச் உயர்ந்துள்ளது. இந்த தகவலை இந்தோனேசியாவின் தேசிய பேரிடர் மேலாண்மை வாரியம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் நாசா மற்றும் கலிபோர்னியா தொழில் நுட்ப நிறுவனத்தின் விஞ்ஞானிகள் செயற்கைகோள் போட்டோக்கள் மூலம் ஆய்வு நடத்தி இத்தகவலை வெளியிட்டுள்ளனர்.
tags :- island’s height rose Indonesia’s earthquake tamil news
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
***************************************
- அமெரிக்காவின் ஒரு நகரத்தில் தனித்து வாழும் பெண் – (வீடியோ உள்ளே).
- அணில் குட்டிக்கு பயந்து பொலிசுக்கு அழைப்பு விடுத்த நபர்
- காற்றில் இயங்கும் கார் எகிப்தில் கண்டுபிடிப்பு
- தாய்லாந்தில் புத்த துறவிக்கு 114 ஆண்டு சிறை
- பார்ப்பவர்களின் மனதை உருகவைக்கும் சிறுவனின் வீடியோ!
எமது ஏனைய தளங்கள்