கணவரால் சுட்டு கொல்லப்பட்டார்: பாடகி ரேஷ்மா

0
303
Rashma shot dead husband tamil news

பாகிஸ்தான் நாட்டில் கைபர் பக்துங்குவாவில் நவ்ஷெரா கலான் பகுதியில் வசித்து வந்தவர் பாடகி ரேஷ்மா. இவர் அந்நாட்டில் புகழ் பெற்ற பேஷ்டோ பாடல்களை பாடி வந்துள்ளார். ஜோபல் கோலூனா என்ற பிரபல நாடகத்திலும் நடித்துள்ளார். Rashma shot dead husband tamil news

இந்த நிலையில், கணவரை பிரிந்து தனது சகோதரர் வீட்டில் வசித்து வந்துள்ளார். இவரது கணவருக்கு இவர் 4வது மனைவி ஆவார்.

இந்த நிலையில், அவரது வீட்டிற்குள் நுழைந்த கணவர் ரேஷ்மாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் ரேஷ்மாவை நோக்கி துப்பாக்கியால் சுட்டு விட்டு அங்கிருந்து தப்பியோடி உள்ளார்.

இதுபற்றி பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர். இது பாகிஸ்தானின் கைபர் பக்துங்குவாவில் பெண் கலைஞர்களுக்கு எதிராக இந்த வருடத்தில் நடைபெறும் 15வது சம்பவமாகும்.

கடந்த பெப்ரவரி 3ந்தேதி நிகழ்ச்சி ஒன்றில் குற்றவாளியுடன் கலந்து கொள்ள தொடர்ந்து மறுத்து வந்த மேடை நடிகையான சன்புல் சுட்டு கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

tags :- Rashma shot dead husband tamil news

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

    ***************************************

எமது ஏனைய தளங்கள்