மனைவிக்காகவே அதை கேட்டேன்! யாழ் மாநகர முதல்வர் இமானுவேல் வெளியிட்ட உண்மை

0
616
Northern Provincial emmanuel arnold revealed truth

யாழ் மாநாகரசபையின் ஆறாவது அமர்வு கடந்த செவ்வாய்க்கிழமை மாநகரசபையின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.(Northern Provincial emmanuel arnold revealed truth,Tamilnews)

இந்த அமர்வின்போது யாழ் மாநகரசபை மேயரின் அதிகார துஷ்பிரயோக முயற்சியொன்று அம்பலத்திற்கு வந்தது. தனது தனிப்பட்ட வெளிநாட்டு பயணத்தின்போது, அதிகாரபூர்வ வாகனத்தை பயன்படுத்த முயற்சித்த தகவல் வெளியாகியது. எனினும், அதிகாரிகள் அதற்கு இடமளிக்காமல் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

ஆறாவது அமர்வின்போது, மாநகரசபை முதல்வருக்கு வாகனம் வழங்கியிருக்க வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சிலரும் முதல்வரும் போர்க்கொடி தூக்கினர். ஈ.பி.டி.பியும் அதை ஆதரித்தது. எனினும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி அதை எதிர்த்தது.

எனினும், அதிகாரிகள் அதை ஏற்கவில்லை. உள்ளூராட்சி அமைச்சின் கட்டளை சட்டத்தின் பிரகாரம் உள்ளூராட்சி ஆயைாளரின் உத்தரவிற்கமைய முதல்வரின் தனிப்பட்ட பணயங்களிற்கு வாகனம் அனுப்ப முடியாது என அதிகாரிகள் விளக்கமளித்தனர்.

த.தே.ம.முன்னணியின் வி.மணிவண்ணன் குறிப்பிடும்போது- சட்டத்தின் பிரகாரம் அனைத்தும் நடக்க வேண்டும். அதை மீறி இலஞ்சம், ஊழல் இருக்ககூடாது. முதல்வரின் தனிப்பட்ட பயணத்திற்கு வாகனம் வழங்க முடியாதென்றால், வழங்க கூடாதுதான். ஒருவர் பிழை செய்கிறார் என்றால், மற்றவர்களும் பிழை செய்ய கூடாது என்றார்.

இதையடுத்து கருத்து தெரிவித்த முதல்வர்- மனைவிக்கு முன் கேவலப்பட்டு நிற்கக்கூடாதென்பதற்காகவே வாகனத்தை கோரினேன். அது கிடைக்காதென தெரிந்ததும் மாற்றுவழியை ஏற்பாடு செய்தேன் என்றார்.

அண்மையில் தனது குடும்பத்துடன் தனிப்பட்ட பிரான்ஸ் சுற்றுலாவிற்கு முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் சென்றிருந்தார். நாடு திரும்பி, விமானநிலையத்தில் இருந்து யாழ் வரவே வாகனத்தை கோரியிருந்தார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:Northern Provincial emmanuel arnold revealed truth,Northern Provincial emmanuel arnold revealed truth,