கடந்த 2007ஆம் ஆண்டு தொடக்கம், 2009ஆம் ஆண்டு வரை கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 11 இளைஞர்களைக் கடத்தி காணாமல் ஆக்கிய வழக்கில், நீண்டநாட்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறிலங்கா கடற்படை புலனாய்வு அதிகாரிகள் இருவர் நேற்று பிணையில் விடுவிக்கப்பட்டனர். Two Navy Intelligence Officers Bail Involve Tamil People Kidnap
கடற்படைப் புலனாய்வு அதிகாரிகளாக இருந்த, கஸ்தூரிகே காமினி, துசார மென்டிஸ் ஆகிய இருவரையும், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பா ஜானகி ராஜரத்தினம் நேற்று பிணையில் செல்ல அனுமதித்தார்.
இவர்கள் இருவரும் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 11 இளைஞர்களின் சடலங்களையும் திருகோணமலையில் இருந்த தடுப்பு முகாமில் இருந்து வெளியே கொண்டு செல்வதற்கு, ஏனைய சந்தேக நபர்களுக்கு உதவினார்கள் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
எனினும் பிணையில் விடுவிக்கப்பட்ட இருவரினதும் கடவுச்சீட்டை முடக்கி வைக்குமாறும் வெளிநாடு செல்வதற்கு தடை உத்தரவு பிறப்பித்தும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- வடமராட்சியில் மீனவரின் படகை தீ வைத்த விஷமிகள்
- வெளிநாட்டவர்களை குறிவைக்கின்றதா வாள்வெட்டுக்குழு; யாழில் அரங்கேறும் சம்பவங்கள்
- மசாஜ் நிலையத்தில் பெண்கள் செய்த வேலை; ஆண்கள் உட்பட 13 பேர் கைது
- அம்மாவிடம் கூறினால் கொன்றுவிடுவேன்; 13 வயது சிறுமி சித்தப்பாவினால் பாலியல் துஷ்பிரயோகம்
- இன்று அதிகாலை நடந்த கோர விபத்து : 19 பயணிகள் படுகாயம்
- கள்ளக்காதலியுடன் உல்லாசம்; 07 வயது மகளுக்கு போதைமருந்து கொடுத்த தந்தை
- கிழக்கு மக்களுக்கு ரணிலிடமிருந்து இனிப்பான செய்தி!