காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கலைஞர் மு.கருணாநிதியை இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் பிரதிநிதிகள் சென்று நலம் விசாரித்துள்ளனர். Tamil Nadu Chief Minister Karunanidhi Health Condition News Tamil News
காவேரி மருத்துவமனைக்குச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்களான ஆறுமுகன் தொண்டமானும், செந்தில் தொண்டமானும் கலைஞர் மு.கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரித்து அறிந்து கொண்டனர்.
அத்துடன், கலைஞர் கருணாநிதி விரைவில் குணமடைய வேண்டும் என்று விரும்புவதாக வாழ்த்து தெரிவித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா கொடுத்தனுப்பிய கடிதத்தையும், அவர்கள், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் கொடுத்தனர்.
இவர்களுடன், சென்னையில் உள்ள சிறிலங்கா துணைத் தூதுவர் கிருஷ்ணமூர்த்தியும் காவேரி மருத்துவமனைக்குச் சென்றிருந்தார்.
அதேவேளை, உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள கலைஞர் மு.கருணாநிதியின் உடல் நிலை சீராக இருப்பதாக நேற்றிரவு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- வடமராட்சியில் மீனவரின் படகை தீ வைத்த விஷமிகள்
- வெளிநாட்டவர்களை குறிவைக்கின்றதா வாள்வெட்டுக்குழு; யாழில் அரங்கேறும் சம்பவங்கள்
- மசாஜ் நிலையத்தில் பெண்கள் செய்த வேலை; ஆண்கள் உட்பட 13 பேர் கைது
- அம்மாவிடம் கூறினால் கொன்றுவிடுவேன்; 13 வயது சிறுமி சித்தப்பாவினால் பாலியல் துஷ்பிரயோகம்
- இன்று அதிகாலை நடந்த கோர விபத்து : 19 பயணிகள் படுகாயம்
- கள்ளக்காதலியுடன் உல்லாசம்; 07 வயது மகளுக்கு போதைமருந்து கொடுத்த தந்தை
- கிழக்கு மக்களுக்கு ரணிலிடமிருந்து இனிப்பான செய்தி!