மகிந்த அரசின் அநியாயங்களை போல நல்லாட்சி அரசு செய்ததில்லை! மைத்திரி பெருமிதம்!

0
407
President Maithripala Sirisena Last Event Speech

கடந்த அரசு செய்த எத­னை­யும் கூட்­ட­ரசு செய்­ய­வில்லை என்­பதை மக்­கள் புரிந்­துக் கொள்ள வேண்­டும். நிலை­யான அபி­வி­ருத்தி மற்­றும் ஜன­நா­யக ஒரு­மைப்­பாடு போன்ற விட­யங்­களைக் கூட்­ட­ரசு உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளது என ஜனாதிபதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரிவித்துள்ளார். President Maithripala Sirisena Last Event Speech

களு­கங்கை நீர்த்­தேக்­கத்­தின் நீர் நிரப்­பும் நிகழ்வு நேற்று இடம்­பெற்­றது. இதில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றும் போதே அவர் இத­னைத் தெரி­வித்­தார்.

ஜனாதிபதி மேலும் கூறியதாவது,

கூட்­ட­ர­சில் அனைத்து ஜன­நா­ய­கங்­க­ளும் உறு­திப்­ப­டுத்­தப்­பட்டு சுயா­தீ­ன­மா­கச் செயற்­ப­டக் கூடிய நிலைமை தோற்­று­விக்­கப்­பட்­டுள்­ளது. ஊட­கங்­கள் மக்­க­ளின் ஜன­நா­யக உரி­மை­க­ளைப் பாது­காக்­கும் கரு­வி­யா­கச் செயற்­பட வேண்­டும் என்ற கார­ணத்­தி­னால் ஊடக சுதந்­தி­ரம் பலப்­ப­டுத்­தப்­பட்­டது. ஆனால் தற்போது எதிர்­பார்க்­கப்­பட்ட இலக்கை அடைய முடி­யாத நிலைமை உரு­வா­கி­யுள்­ளது.

தோற்­று­விக்­கப்­பட்ட ஜன­நா­ய­கம் சில­ரது முறை­யற்ற செயற்­பாட்­டின் கார­ண­மாக இல்­லா­தொ­ழிந்து கண்­ணீர் சிந்­தக் கூடிய நிலைமை உரு­வா­கும் சாத்­தி­யக் கூறு­கள் காணப்­ப­டு­கின்­றன.

ஊட­கத்­தின் சுதந்­தி­ரத்தை முறை­யா­கப் பயன்­ப­டுத்தி ஏற்­ப­டக் கூடிய ஆபத்­துக்­களை ஊட­கங்­கள் தவிர்த்­துக்­கொள்ள வேண்­டும் என ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites