கடந்த அரசு செய்த எதனையும் கூட்டரசு செய்யவில்லை என்பதை மக்கள் புரிந்துக் கொள்ள வேண்டும். நிலையான அபிவிருத்தி மற்றும் ஜனநாயக ஒருமைப்பாடு போன்ற விடயங்களைக் கூட்டரசு உறுதிப்படுத்தியுள்ளது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். President Maithripala Sirisena Last Event Speech
களுகங்கை நீர்த்தேக்கத்தின் நீர் நிரப்பும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஜனாதிபதி மேலும் கூறியதாவது,
கூட்டரசில் அனைத்து ஜனநாயகங்களும் உறுதிப்படுத்தப்பட்டு சுயாதீனமாகச் செயற்படக் கூடிய நிலைமை தோற்றுவிக்கப்பட்டுள்ளது. ஊடகங்கள் மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கும் கருவியாகச் செயற்பட வேண்டும் என்ற காரணத்தினால் ஊடக சுதந்திரம் பலப்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது எதிர்பார்க்கப்பட்ட இலக்கை அடைய முடியாத நிலைமை உருவாகியுள்ளது.
தோற்றுவிக்கப்பட்ட ஜனநாயகம் சிலரது முறையற்ற செயற்பாட்டின் காரணமாக இல்லாதொழிந்து கண்ணீர் சிந்தக் கூடிய நிலைமை உருவாகும் சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றன.
ஊடகத்தின் சுதந்திரத்தை முறையாகப் பயன்படுத்தி ஏற்படக் கூடிய ஆபத்துக்களை ஊடகங்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- வருட இறுதிக்குள் சென்னை இ திருச்சியிலிருந்து பலாலிக்கு விமான சேவை!
- ஆட்சியை நடத்துவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் யார் உள்ளனர்?
- பாவனைக்கு உதவாத அரிசி விற்பனை; மோசடிக்காரர் கைது
- கல்வித்துறையில் அரசியல் பழிவாங்கல்; பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடத் தீர்மானம்
- முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம்
- கறுப்பு ஜூலை கலவரம்; யாழ். பல்கலைக்கழகத்தில் நினைவு நிகழ்வு
- 100 பவுண் நகைகளை கொள்ளையடித்த இலங்கை அகதி
- முஸ்லிம் வர்த்தகர்களுக்கு எதிராக சிங்கள வர்த்தகர்களை தூண்டிவிட சிலர் முயற்சி
- மஹிந்த ராஜபக்ச புதுடெல்லிக்கு விஜயம்; சுப்பிரமணிய சுவாமி அழைப்பு