கடிதம் எழுதிவிட்டு தண்டவாளத்தில் தலை வைத்த நண்பிகளின் மரணத்தில் மர்மம்!

0
492

நேற்றிரவு(11-07-2018) 8.45 அளவில் கம்பஹா தரலுவ பகுதியின் புகையிரத தண்டவாளத்தில் தலையை வைத்து யுவதிகள் இருவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளனர். Garment Factory Two Female Staff Suicide Reason Unclear

புறக்கோட்டையிலிருந்து பதுளை நோக்கி சென்ற புகையிரதத்திலேயே மேற்படி தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

மினுவங்கொடை பகுதியில் வசிக்கும் 21 வயதுடைய யுவதி ஒருவரும் நீர் கொழும்பு பகுதியை சேர்ந்த 22 வயதுடைய யுவதி ஒருவருமே தற்கொலை செய்துக்கொண்டுள்ளனர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தற்கொலை செய்துக்கொண்டவர்களில் யுவதி ஒருவரின் கையிலிருந்து கடிதம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதோடு, இரு கையடக்க தொலைபேசிகள், இரு பயணப்பொதிகள், கடவு சீட்டு மற்றும் திறப்பு ஆகியன சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுவதிகள் இருவரும் ஒரே ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிபவர்கள் என்பதால் பணிபுரியும் இடத்தில் இருவருக்கும் பாலியல் தொல்லைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா அல்லது வேறு ஏதாவது காரணம் இந்த தற்கொலைகளுக்கு பின்னால் உள்ளதா என விசாரணைகள் நடைபெற்று வருகின்றது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites