இரும்பின் பாகங்கள் இராணுவச் சிப்பாயின் வயிற்றுக்குள்; அதிர்ச்சியில் பொலிஸார்

0
414
Military soldier arrested

கெலிஒயா பிரதேசத்தில் பாடசாலை முடிவுற்று குறுக்கு வீதியில் சென்று கொண்டிருந்த ஆசிரியை அணிந்திருந்த 2 1/4 பவுன் தங்கச் சங்கிலியை இராணுவச் சிப்பாய் ஒருவர் அறுத்துச் சென்றுள்ளார். (Military soldier arrested)

இதன்போது, பொலிஸாரை கண்ட குறித்த இராணுவச் சிப்பாய் அந்த தங்கச் சங்கிலியை வாய்க்குள் விழுங்கியுள்ளார்.

இதனையடுத்து, இராணுவ சிப்பாயை கைதுசெய்து கண்டி நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்திய போது, சந்தேக நபரை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

நீண்ட காலமாக மிகவும் மதுவுக்கு அடிமையான குறித்த இராணுவச் சிப்பாய், பல்லேகெல்ல இராணுவ முகாமில் கடமை புரிகின்றவர் என்றும் ஓய்வு நேரங்களில் இவ்வாறு தங்கச் சங்கிலி திருட்டில் ஈடுபடுபவர் என்றும் தெரியவந்துள்ளது.

தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி சரிப்பார்ப்பது போன்று நடித்து, குறித்த ஆசிரியை அருகில் சென்றபோது, தங்கச் அங்கிலியை அறுத்து தப்பியோடியுள்ளார்.

குறித்த ஆசிரியை மோட்டார் சைக்கிளின் இலக்கத்தை குறித்து வைத்து, கடுகஸ்தோட்டை பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.

உடனே தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸார், சந்தேக நபரை அணுகிய போது திருடிய தங்கச் சங்கிலியுடன் சேர்ந்து பென்டனையும் விழுங்கியுள்ளார்.

பொலிஸார் சந்தேகநபரை கைதுசெய்து பேராதெனிய வைத்தியசாலையில் பரிசோதனை செய்த போது, வயிற்றுனுள் தங்கச் சங்கிலி இருப்பதைக் கண்டுள்ளனர்.

தனக்கு முன்னர் குண்டொன்று தாக்கியதால் சில இரும்பு பாகங்கள் வயிற்றுனுள் இருப்பதாக இராணுவச் சிப்பாய் கூறியுள்ளார்.

இதனையடுத்து, பேதி மருந்து கொடுத்து தங்கச் சங்கிலியை மீட்டுள்ளதுடன், அடையாள அணிவகுப்பிற்கு சந்தேக நபர் உட்படுத்தப்பட்டுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Military soldier arrested