(tamilnews Afghanistan bomb blast target hindus seeks)
ஆப்கானிஸ்தானில் கிழக்கு பகுதியில் உள்ள நன்கர்ஹர் மாகாணத்தின் தலைநகரான ஜலாலாபாத் என்னும் இடத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் அந்நாட்டின் அரச தலைவர் அஷ்ரப் கானி பங்கேற்றார்.
அந்த நிகழ்ச்சி நிறைவடைந்து அவர் புறப்பட்டு சென்றவுடன் முக்காபெரட் சதுக்கம் பகுதியில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் இந்துக்கள், சீக்கியர்கள் உட்பட 12 பேர் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தற்கொலைப்படை தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது எனவும் 20 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
சீக்கியர்கள் மற்றும் இந்துக்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, ஆப்கானிஸ்தானில் சீக்கியர்கள், இந்துக்களை குறிவைத்து நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலுக்கு பஞ்சாப் முதலமைச்சர் அமரிந்தர் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டில் சீக்கியர்கள் மீது நடத்திய தற்கொலைப்படை தாக்குதல் கொடூரமானது மற்றும் கோழைத்தனமானது என காபுலில் உள்ள இந்திய தூதரகம் தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜலாலாபாத் நகரில் சீக்கியர்கள் மற்றும் இந்துக்கள் மீது நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த தாக்குதல் கொடூரமானது மற்றும் கோழைத்தனமானது. இந்த தாக்குதலில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளது.
(tamilnews Afghanistan bomb blast target hindus seeks)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- வட்டி இல்லா கடன் வழங்க அரசாங்கம் நடவடிக்கை
- நண்பியின் நிர்வாண படங்களை காதலனுக்கு வழங்கி பணம் பெற முயற்சித்த நண்பி – வௌ்ளவத்தையில் சம்பவம்
- யாசகம் பெறுவதற்கு இன்று முதல் தடை
- பல தமிழ் பெண்களின் வாழ்வை சீரழித்த பிரச்சினைக்கு விரைவில் முடிவு
- மனைவி மற்றும் பெற்ற பிள்ளைகள் மீது அசிட் ஊற்றிய கொடூர தந்தை…….!
- கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்திற்கு 500 வது நாள்
- பெரிய மார்பகம் இருந்தால் தான் திரைத்துறையில் வெற்றி! அதிர்ச்சி கொடுத்த நடிகையின் பேட்டி!
- ஒரு கோப்பை தேநீரின் விலையை குறைக்க நடவடிக்கை
- ஆடு மேய்க்க சென்ற சிறுமியை ஈவிரக்கமின்றி….பின்னர் நடந்த விபரீதம்
- புலம் பெயர் தமிழர்களுக்கு ஊடக நிறுவனங்களுக்கான அனுமதியை வழங்க வேண்டாம்
- மதுவை ஊற்றிக்கொடுத்து சகமாணவி பலாத்காரம்- வீடியோ எடுத்து மிரட்டி ஓராண்டாக சித்ரவதை செய்த மாணவர்கள்
- இளம் ஆசிரியையின் கள்ளக் காதல் அம்பலமானது: யாருடன் தெரியுமா?