தொலைக்காட்சியில் காண்பிக்கப்படும் திகிலூட்டும் செயற்பாடுகளை பின்பற்றிச் சென்ற 10 வயது சிறுவனின் கழுத்து இறுகி பரிதாபமாக உயிரிழந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. (Terrifying scene television 10 year old boy killed)
இவ்வாறு உயிரிழந்த சிறுவன், வாரியபொல, நேபொடைவௌ வித்தியாலயத்தில் 5 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவன் என்றும் தெரியவந்துள்ளது.
வீட்டில் ஒருவரும் இல்லாத போது, இந்தச் சிறுவன் தனது இல்லத்தில் படுக்கை அறையில் கொசு வலையை தொங்கவிடும் கொக்கியில் தொங்கி விளையாடியுள்ளார்.
இதன்போது, இந்தக் கொக்கியில் சிறுவனின் கழுத்து இறுகி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் சிறுவனின் தந்தை தெரிவிக்கையில், எனது மகன் கொக்கியில் தொங்கி விளையாடுவேன் என கூறியுள்ளான்.
ஆனால், நாங்கள் அதனைக் காணவில்லை. தொலைக்காட்சியை பார்த்தே இதனைக் கற்றுள்ளான். அவன் எப்போதும் ரிவி முன் தான் இருப்பான்.
எனது மகனுக்கு இவ்வாறு எதுவும் நடக்கும் என நினைக்கவில்லை. எங்களின் மகன் உயிரிழந்துள்ளான்.
மற்றைய சிறுவர்களுக்கு இவ்வாறு எதுவும் நடக்கக்கூடாது என்றே இதனை நான் கூறுகின்றேன் என்று உயிரிழந்த சிறுவனின் தகப்பனான 41 வயதுடைய டப்.எம். உபுல் ஷாந்த கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
tags :- Terrifying scene television 10 year old boy killed
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- முஸ்லிம்களின் நன்மை கருதியே சிறையில் காற்சட்டை அணிய இணங்கினேன்
- காத்தான்குடியில் கோர விபத்து – வேனில் பயணித்த மூவர் மரணம்
- இறுதி கட்டத்தில் திரில் கோல் போட்டு எகிப்தை வீழ்த்திய சவுதி அரேபியா!
- ரஷ்யாவை அதன் சொந்த மைதானத்தில் பந்தாடியது உருகுவே!!!
- தென்னிந்தியாவை ஆட்டிப் படைக்கும் பிக்பாஸ் காய்ச்சல்!
- மஹிந்தவின் ஊடக இணைப்புச் செயலாளர் சிங்கப்பூரில் கைது
- தவறான நட்பால் கொல்லப்பட்ட ராணுவ அதிகாரியின் மனைவி (UPDATE)
- நான் திருடன்தான் என்றால், என்னையும் சிறையில் அடையுங்கள் – நாமல் ராஜபக்ஷ விரக்தி