கொலையுண்ட சிறுவன் ஆவியாக வந்து பழிவாங்கும் கொடூரம்! சென்னையில் பரபரப்பு!

0
1062
murdered boy coming volatile ghostroom Chennai

சென்னை, சூளைமேடு பகுதியில் கொலை செய்யப்பட்ட சிறுவன், கனவில் வந்ததால் அவனைக் கொலை செய்த மூன்று பேரும் போலீஸில் சரணடைந்துள்ள சம்பவம் பரபரப்பினை கிளப்பியுள்ளது. (murdered boy coming volatile ghostroom Chennai)

சென்னை, சூளைமேடு ஜோதியம்மாள் நகரைச் சேர்ந்தவர் பெருமாள். இவர் பிளாட்பாரத்தில் பழைய புத்தகம் விற்றுவருகிறார். இவரின் மகன் ராஜேஷ். 6 ஆம் வகுப்பு வரை படித்த இவர், அதற்கு மேல் படிக்கவில்லை. நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றிவந்தார். இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் வீட்டை விட்டு வெளியே சென்ற இவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. இது தொடர்பாக அவரது பெற்றோர்கள் காவல்துறையிலும் புகார் அளித்துள்ளனர்.

இந்த நிலையில், நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் முத்துவேல்பாண்டியனிடம் நேற்று மூன்று சிறுவர்கள் சரண் அடைந்தனர். அவர்கள் தாங்கள் தான் பணம் தொடர்பான தகராறில் ராஜேஷை கொலை செய்ததாகவும், அதன் பின்னர் தினம் இரவு தங்களது கனவில் ராஜேஷ் வந்து தூங்கவிடாமல் செய்ததாகவும் அதன் காரணமாகவே சரணடையும் முடிவுக்கு வந்ததாகவும் தெரிவித்த சம்பவம் காவல்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

tags :- murdered boy coming volatile ghostroom Chennai

More Tamil News

Tamil News Group websites :