ஒரு வாரம் சிலைக்குள் வசித்த நபர்!

0
865
Artist sat Narasimha statue one week

பிரான்ஸ் நாட்டின் சாகச கலைஞர் ஒருவர் நரசிம்ம சிலைக்குள் ஒருவார காலம் அமர்ந்திருந்து சாதனை படைத்துள்ளார். Artist sat Narasimha statue one week

பிரான்ஸைச் சேர்ந்த ஆப்ரகாம் போன்சிவெல், பாரிஸில் உள்ள அருங்காட்சியக பூங்காவில், 3.2m உயரம் கொண்ட நரசிம்ம சிலையை வைத்து, அதற்குள் ஒருவார காலம் அமர்ந்திருந்தார். தினமும் 20L  நீரும், வறுத்த இறைச்சியும் சாப்பிட்டு, அங்கே அமர்ந்திருந்த அவரை நிறைய பேர் பார்த்து பாராட்டினர்.

குறித்த சாகச கலைஞர் ஒருவார காலம் சிலைக்குள்ளேயே இரவும், பகலும் அமர்ந்திருந்து நேற்று, வெள்ளிக்கிழமை தனது சாதனையை நிறைவு செய்து வெளியே வந்தார்.

மேலும், கடந்த ஆண்டில் ஒரு பாறைக்குள்ளும், 2014-ஆம் ஆண்டில் கரடி வடிவ சிலைக்குள்ளும் அமர்ந்தும் அவர் சாதனை படைத்தமை குறிப்பிடத்தக்கது.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**