பாரிஸ் பயங்கரவாத தாக்குதலின் முக்கிய குற்றவாளி, Yassine Atar நேற்று பிரான்ஸிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளான். 2015 November Paris attacker arrested
நவம்பர் 13, 2015 ஆம் ஆண்டு பரிஸ் மற்றும் அதன் புறநகர்களில் பயங்கரவாத தாக்குதலை நடத்திய பயங்கரவாதி Osama Atar இன் சகோதரனான Yassine Atar, கடந்த மார்ச் 2016 ஆம் ஆண்டு பெல்ஜியத்தில் வைத்து கைது செய்யப்பட்டான்.
இவன் பெல்ஜியத்திலும் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் மிக முக்கியமான குற்றவாளியாக கருதப்பட்டு, பெல்ஜிய சிறையில் அடைக்கப்பட்டு விசாரணைகளை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையிலே தற்போது மேலதிக விசாரணைகளுக்காக பிரான்ஸிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளான்.
இதற்கு முன்னதாக, இதே பெல்ஜிய தாக்குதலில் தொடர்புடைய சாலா அப்தெல்சலாம் பிரெஞ்சு படையினரால் கைது செய்யப்பட்டதோடு, இவ்வருட ஆரம்பத்தில் பெல்ஜியத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
**Most Related Tamil News**
- பிரான்ஸ் நாட்டின் குடியேற்றவாசிகள் கடைபிடிக்க வேண்டிய சட்டங்களும் நடைமுறைகளும்!
- IS இல் அங்கம் வகித்தால் ஆயுள் தண்டனை!
- தமிழ்நாட்டின் இரத்தம் குடிக்கக் காத்திருக்கும் ஸ்டெர்லைட். பாரத தேசத்தின் இறையாண்மையை அழுக்காகும் அந்நிய தேசம்.!
- அவுஸ்திரேலியா நீண்ட நாட்களாக எதிர்ப்பார்த்திருந்தது கிடைக்கப்போகின்றது!
- இந்தி டைரக்டருக்கு வலை வீசிய பாலியல் சர்ச்சை நடிகை : விரைவில் டும்.. டும்.. டும்..!