{ crucifixion borrower tongue repayment }
உத்தரபிரதேச மாநிலம் அமோரா பகுதியில் வசிப்பவர் ராஜூ. கூலி வேலை செய்யும் இவர் தனது மனைவி குழந்தையுடன் வசித்து வருகின்றார்.
இவர் அதேபகுதியில் வசிக்கும் கந்து வட்டி கொடுப்பவரிடம் கடன் வாங்கியுள்ளார். கடன் வாங்கிய நாளில் இருந்து சரியான நேரத்திலேயே ராஜூ வட்டியினை கொடுத்துள்ளார்.
ஆனால் சிறிது நாட்களாக வேலை இல்லாத காரணத்தினால் வட்டியை அவரால் சரியான நேரத்தில் அளிக்க முடியவில்லை.
இதனால் கந்துவட்டி கொடுத்தவருக்கும் ராஜூவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதால் கடன் கொடுத்த 4 பேர் ஒன்று சேர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு ராஜூவின் நாக்கை துண்டித்துள்ளனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், நாக்கை துண்டித்து விட்டு தலைமறைவான 4 பேரையும் தேடி வருகின்றனர்.
மேலும், உத்திரபிரதேசத்தில் கந்துவட்டி கொடுமை அதிகரித்து வருவதாகவும், அரசு இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
Tags: crucifixion borrower tongue repayment
<< அதிகம் வாசிக்கப்பட்ட இந்தியா செய்திகள் >>
*10 வருடம் பழமைவாய்ந்த 13 கிலோ மனுக்கள்: தலையில் சுமந்து வந்த மூதாட்டி கடலூரில் ஒரு கண்ணீர் சம்பவம்
*இணையதளங்களில் பெண்களை ஆபாசமாக சித்தரித்தால் 7 ஆண்டுகள் வரை சிறை!
*நிபா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவ செலவை ஏற்க போகும் கேரள அரசு!
*நீட் தேர்வின் முடிவில் தோல்வியடைந்த மாணவன் 8 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை!
*பாதுகாப்பு கேட்டு நடிகர் தனுஷ் கோர்ட்டில் மனு!
*மாணவி எடுத்த விபரீத முடிவு!!நடந்தது என்ன?
*காலாவா? அல்லது விஸ்வரூபமா? – கர்நாடகா!
*‘நாங்க ஒரே சாதி’ – குமரெட்டியாபுரம், தூத்துக்குடி!