கரடி தாக்குதலில் படுகாயமடைந்த மீனவர் வைத்தியசாலையில்

0
963
Bear Attack

(Bear Attack Fisherman injured hospital admit)
திருகோணமலை, குச்சவெளி பகுதியில் இருந்து, சுமார் 7 வயதான நோய் வாய்ப்பட்ட கரடியொன்றைப் பிடித்து சிகிச்சையளிப்பதற்காக வனவிலங்கு அதிகாரிகள் கிரிதலை வனவிலங்கு கால்நடை வைத்தியசாலைக்கு கடந்த 15 ஆம் திகதி கொண்டு சென்றனர்.

கடந்த 20 ஆம் திகதி இரவு குறித்த கரடி அதனை அடைத்து வைத்திருந்த கூட்டை உடைத்து, தப்பியோடியதாக கிரிதலை வனவிலங்கு கால்நடை வைத்தியசாலையின் வைத்தியர் கலிங்கு ஆராச்சி தெரிவித்துள்ளார்.

இந்தக் கரடி குறித்த பகுதியில் வசிக்கும் மக்களை தாக்குவதற்கு முற்படுவதாக வனஜீவராசிகள் அதிகாரிகளிடம் தெரிவித்ததை அடுத்து, இதனைப் பிடிப்பதற்காக வனவிலங்கு அதிகாரிகள் பகல் இரவாக தேடியுள்ளனர்.

இதன்பின்னர் கடந்த 24 ஆம் திகதி காலை குறித்த கரடி மீனவர்கள் இருவரை தாக்கியுள்ளது.
இதனையறிந்த வனஜீவராசிகள் அதிகாரிகள் குறித்த இடத்திற்கு சென்ற போது, குறித்த கரடி மீனவர் ஒருவரைத் தாக்கிக் கொண்டிருந்துள்ளது.

இந்த மீனவரை காப்பாற்றுவதற்காக வனஜீவராசிகள் அதிகாரிகள் குறித்த கரடியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாகவும் தெரிவித்தனர்.

கரடி தாக்கியதில் காயமடைந்த 44 வயதான மீனவர் பொலன்நறுவை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்தக் கரடியின் தாக்குதலில் இருந்து மக்கள் உயிர்தப்பியது அதிசயம் என்றும் வனஜீவராசிகள் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

More Tamil News

Tamil News Group websites :

Tags; Bear Attack Fisherman injured hospital admit