கண்டி திகன சம்பவங்கள் தொடர்பில் வாக்கு மூலங்கள் பதிவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பம்

0
457
candy conflict record people voice Lankan human rights council

candy conflict record people voice Lankan human rights council
கண்டி நிர்வாக எல்லைக்குள் இடம்பெற்ற பதற்ற நிலை தொடர்பில் சாட்சியங்களை பதிவு செய்யும் நடவடிக்கைகளை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஆரம்பித்துள்ளது.

இதற்கமைய, கண்டி மாவட்டத்தின் திகன, அக்குரனை, அம்பதென்ன ஆகிய பிரதேசங்களிலேயே சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் தீபிகா உடகம இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த மூன்று நாட்களாக மேற்கொள்ளப்பட்ட சாட்சி பதிவுகளில் பல முக்கியமான தகவல்கள் பெற்று கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் 100க்கும் அதிகமானவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் தீபிகா உடகம தெரிவித்துள்ளார்.
candy conflict record people voice Lankan human rights council

More Tamil News

Tamil News Group websites :