கண்டி நீதிமன்றுக்கு முன்னால் கொடூரம் : இருவர் பலி

0
833
two dead kandy district court railway track

(two dead kandy district court railway track)
கண்டி நீதிமன்ற வளாகத்திற்கு முன்னால் ரயிலில் மோதி இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று இரவு கொழும்பு நோக்கி பயணித்த ரயிலிலேயே மோதி அவர்கள் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்துள்ளவர்களில் ஒருவர் சுதுகம்பொல பகுதியை சேர்ந்த 79 வயதான நபர் எனவும், மற்றைய நபர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலங்கள், கண்டி வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Time Tamil News Group websites :