வெளிநாட்டு நாணயத்தாள்களுடன் இருவர் கைது

0
985
Two arrested foreign currency notes

(Two arrested foreign currency notes)
இலங்கையில் இருந்து சிங்கப்பூருக்கு சட்டவிரோதமாக வெளிநாட்டு நாணயத் தாள்களை கடத்த முயற்சித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பைச் சேர்ந்த குறித்த இருவரையும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.

இவர்கள் சுமார் 72 ஆயிரம் அமெரிக்க டொலர்களை மிகவும் சூட்சுமமான முறையில் பயணப் பையில் மறைத்து சிங்கப்பூருக்கு எடுத்து செல்ல முற்பட்டபோதே இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட அமெரிக்க டொலர்களின் பெறுமதி ஒரு கோடியே 11 இலட்சத்து 60 ஆயிரம் ரூபா என சுங்கத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்களில் 30 வயதுடைய ஆணொருவரும் 55 வயதுடைய பெண்ணொருவரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் இருவரிடம் சுங்கத்திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்:டு வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

More Tamil News

Tamil News Group websites :

Tags; Two arrested foreign currency notes