இரணைதீவில் தாமாக சென்று குடியேறிய மக்கள்; தமிழ் தேசிய மக்கள் முன்னணி சந்திப்பு

0
1057
Tamil National People's Front Meeting iranaitivu people

(Tamil National People’s Front Meeting iranaitivu people)
கிளிநொச்சியில் கடற்படையின் கட்டுப்பாட்டில் உள்ள இரணைதீவுப் பகுதியில் தாமாகவே சென்று குடியேறியுள்ள மக்களை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் இன்று காலை சென்று சந்தித்துள்ளனர்.

இதன்போது அந்த மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் தேவைகள் குறித்தும் கலந்துரையாடியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அந்த மக்களுக்கு ஒரு தொகுதி உணவுப் பொருட்களையும் வழங்கி வைத்தனர்.

மேலும் அந்தக் கட்சியின் தூயகரங்கள் தூயநகரம் செயற்திட்டத்தின் கீழ் அந்தப் பிரதேசத்தில் சிரமதானப் பணிகளையும் மேற்கொண்டனர்.

இந்த விஐயத்தின் போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் பலரும் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

More Tamil News

Tamil News Group websites :

Tags; Tamil National People’s Front Meeting iranaitivu people