(Sri Lankan woman nabbed gold worth Rs.2.6 million)
சட்டவிரோதமாக டுபாய் நாட்டில் இருந்து பெண்ணொருவரால் எடுத்துவரப்பட்ட 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க ஆபரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இன்று அதிகாலை 12.15 மணியளவில் டுபாயில் இருந்து ஸ்ரீலங்கன் விமான சேவையின் யூ.எல் 222 என்ற விமானத்தில் வந்த பெண்ணொருவரே கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீர்கொழும்பு கொச்சிக்கடை பகுதியை சேர்ந்த 45 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணின் பயணப் பையில் இருந்து 432 கிராமுடைய சங்கிலி, வளையல், மோதிரம் மற்றும் இன்னும் பல்வேறு தங்க ஆபரணங்கள் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
அத்துடன், குறித்த பெண்ணையும் அவரிடம் இருந்து மீட்கப்பட்ட தங்க ஆபரணங்களையும் விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.
More Tamil News
- யோகேஸ்வரி பற்குணராசாவை எச்சரித்தார் இமானுவேல் ஆனோல்ட்
- வடக்கு முதலமைச்சரின் அழைப்பை ஏற்கப் போவதில்லை
- சமுர்த்தி நிதியத்தில் 675 கோடி ரூபாய்க்கு என்ன நடந்தது?
- தமிழ் பெண்ணை தொந்தரவு செய்த புகையிரத ஊழியருக்கு ஏற்பட்ட கதி
- ஹெரோய்ன் போதைப் பொருளுடன் ஒருவர் கைது
- மே தின நிகழ்வில் ஸ்ரீசுக 11 உறுப்பினர்கள் கலந்துகொள்ளவில்லை
- மண்சரிவினால் 87 குடும்பங்கள் பாதிப்பு
- 08 ஆவது நாடாளுமன்றத்தின் 2 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பம்
- பருத்தித்துறையில் மதுபானசாலையை அகற்றுமாறு கோரி ஆர்ப்பாட்டம்
- வெலிக்கடை துப்பாக்கி பிரயோகம்; சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்
Tamil News Group websites :
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- timetamil.com
Tags; Sri Lankan woman nabbed gold worth Rs.2.6 million