முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பில் கலந்துரையாடல்

0
663
Discussion mullivaikkal remembrance day

(Discussion mullivaikkal remembrance day)
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பிலான கலந்துரையாடலொன்று வடக்கு மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்றுள்ளது.

முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், மாகாண சபை அவைத் தலைவர் சீ.வி.கே. சிவஞானம், வட மாகாண அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள், ஐனநாயகப் போராளிகள் கட்சியினர், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குறித்து கடந்த சில தினங்களிற்கு முன்னரும் முதலமைச்சர் தலைமையில் சபை உறுப்பினர்களுக்கிடையிலான கலந்துரையாடலொன்று நடைபெற்றிருந்தது.

இதன் போது, முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை வடமாகாண சபையின் ஏற்பாட்டில் நடத்துவதென்றும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

More Tamil News

Tamil News Group websites :

Tags; Discussion mullivaikkal remembrance day