மொரிசியஸில் 07 இலங்கையர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல்

0
591
Seven Lankans detained Mauritius smuggled abroad

(Seven Lankans detained Mauritius smuggled abroad)
ஆட்கடத்தற்காரர்களினால் அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படும் இலங்கையை சேர்ந்த சிலர், மொரிசியஸ் நாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிசெல்ஸ் நாட்டிலுள்ள இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் டிக்கிரி ஹேரத் குணத்திலக இதுதொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளார்.

இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் பெருந்தொகையான பணத்தை செலவிட்டு தொழில் வாய்ப்பை பெற்றுக்கொள்ளும் நோக்குடன் மொரிசியஸ் நாட்டிற்கு சென்றுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இவர்களிடம் அந்த நாட்டுக்குள் பிரவேசிப்பதற்கான அங்கீகரிக்கப்பட்ட உரிய ஆவணம் இல்லாமையே அவர்கள் கைது செய்யப்பட்டதற்கு காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த 7 இலங்கையர்களை நாட்டுக்கு திருப்பி அனுப்புவதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் டிக்கிரி ஹேரத் குணத்திலக்க தெரிவித்துள்ளார்.

More Tamil News

Tamil News Group websites :

Tags; Seven Lankans detained Mauritius smuggled abroad