சிங்கப்பூரில் நாடாளுமன்ற சபாநாயகரும், பெண் பாநாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் இராஜினாமா செய்துள்ளனர். தகாத உறவு வைத்திருந்தமை காரணமாக அவர்கள் பதவி விலகியுள்ளதாக கூறப்படுகின்றது.
சபாநாயகர் டான் சுவான் ஜின் மற்றும் செங்லி ஹுய் பாராளுமன்ற உறுப்பினர் ஆகியோரின் இராஜினாமாவை பிரதமர் லீ சியென் லூங் ஏற்றுக்கொண்டார். இது தொடர்பாக பிரதமர் கூறும்போது,
இராஜினாமாவை ஏற்றுக்கொண்ட பிரதமர்
மக்கள் செயல் கட்சியின் உயர்ந்த தகுதி மற்றும் தனிப்பட்ட நடத்தையை பேணுவதற்காக சபாநாயகர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரின் இராஜினாமா ஏற்று கொள்ளப்பட்டுள்ளது.
அவர்கள் தகாத உறவில் இருந்தனர். அதை கடந்த பெப்ரவரி மாதம் நிறுத்த சொன்ன பிறகும் அது தொடர்ந்தது. இந்த விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வருமாறு சபாநாயகரிடம் கூறினேன்.
எனினும் அது தொடர்ந்தபடியே இருந்ததனால் அவர்களது இராஜினாமாவை ஏற்றுக்கொண்டேன் என்றார்.
அதேவேளை சபாநாயகர் டான் சுவான் ஜின் எழுதிய இராஜினாமா கடிதத்தில் தனது குடும்பத்தில் கவனம் செலுத்த அரசியலில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.