யாழில் கடன் பிரச்சினையால் குடும்பஸ்தர் தற்கொலை!

0
166

யாழில் கடன் பிரச்சினையால் நபர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

யாழ்ப்பாண நகரப் பகுதியில் நகைப் பட்டறையில் பணியாற்றும் 40 வயதான குடும்பஸ்தர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவறான முடிவு எடுத்த நபர்

அந்நபர் பொட்டாசியம் அருந்தி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று முற்பகல் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மட்டுவிலில் உள்ள அவரது வீட்டிலேயே கடன் பிரச்சினை காரணமாக அவர் இவ்வாறானதொரு தவறான முடிவு எடுத்துள்ளார் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.