ஜனாதிபதித் தேர்தல் வரும் வரையில் எந்தவொரு தேர்தலும் இல்லை – லக்ஷ்மன் யாபா அபேவர்தன

0
394
until presidential election Lakshman Yapa Abeywardena

நாட்டில் ஜனாதிபதித் தேர்தல் வரும் வரையில் எந்தவொரு தேர்தலும் இடம்பெறமாட்டாது என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அரசாங்க எதிர்ப்பு குழு உறுப்பினர் லக்ஷ்மன் யாபா அபேவர்தன தெரிவித்தார். until presidential election Lakshman Yapa Abeywardena

ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் பிரேரணையாகவே மாகாண சபைக்கான எல்லை நிர்ணயக் குழு அறிக்கை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. தற்பொழுது அந்த யோசனை பாராளுமன்றத்தில் தோல்வியடையச் செய்யப்பட்டுள்ளது.

இதனால், சபாநாயகர் குழுவொன்றை நியமிக்க வேண்டும். இந்த குழுவின் பரிந்துரைகள் இரண்டு மாத காலத்துக்குள் சபாநாயகருக்கு சமர்ப்பிக்க வேண்டும். பின்னர் அதனை சபாநாயகர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

ஜனாதிபதியே தொகுதிவாரி முறையில் தேர்தல் நடாத்த வேண்டும் என்ற பிரேரணையைக் கொண்டு வந்தார். இந்தப் பிரேரணை பாராளுமன்றத்தில் தோல்வியடைந்தது என்ற காரணத்தால் ஜனாதிபதி அதில் ஒப்பமிட மறுப்புத் தெரிவிப்பார். பின்னர் இது மறுபடியும் பழைய இடத்துக்கே வரும். இதனால், தேர்தல் ஒன்று வருவது எதிர்பார்க்க முடியாத ஒன்றாகும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

tags :- until presidential election Lakshman Yapa Abeywardena

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites