நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பள அதிகரிப்புக்கு அனுமதி வழங்கப்போவதில்லை – ஜனாதிபதி உறுதி

0
399
president maithripala sirisena announce no increment salary ministers

(Maithripala Sirisena says not approve increase salary Members Parliament)

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பள அதிகரிப்புக்கு அனுமதி வழங்கப் போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார்.

பொலன்னறுவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

அண்மைக்காலமாக இந்த விடயம் குறித்து சர்ச்சையான கருத்துக்கள் அரசியல் மட்டத்தில் நிலவி வருகின்றன.

நீதித்துறை சார்ந்தவர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டதைப் போன்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கொடுப்பனவு அதிகரிக்கப்படும் என்ற நம்பிக்கை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் இருந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

(Maithripala Sirisena says not approve increase salary Members Parliament)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites