பிரான்ஸில் இரு கொள்ளையர்கள், பூட்டியிருந்த வீடு ஒன்றுக்குள் நுழைந்து கொள்ளையடித்துவிட்டு, அவ்வீட்டின் படுக்கையறையில் படுத்து உறங்கியுள்ளனர். மறுநாள் காலை காவல்துறையினர் குறித்த நபர்களை கைது செய்துள்ளனர். France police arrested thieves stolen things did home
படங்களில் வரும் நகைச்சுவை காட்சி போல், இந்த சுவாரஷ்யமான சம்பவம் Mans பகுதியின் மேற்கு பிராந்தியமான Pin-Vert-Galant பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கடந்த ஜூலை 22 ஆம் திகதி இரவு, குறித்த பகுதியில் உள்ள ஆளில்லா வீடு ஒன்றுக்குள் நுழைந்த இரு இளம் கொள்ளையர்கள், வீடு முழுவதும் தேடியுள்ளனர். அப்போது சில நகைகள் அவர்களுக்கு கிடைத்துள்ளது.
ஆனால் அவர்கள் திருடிவிட்டு அங்கிருந்து தப்பிச்செல்லாமல், குறித்த வீட்டு குடும்பத்தினரின் இளம் மகனுடைய அறையில் சாவகாசமாக படுத்து உறங்கிவிட்டார்கள்.
மறுநாள் திங்கட்கிழமை காலை (ஜூலை 23) வீடு திரும்பிய உரிமையாளர்கள், வீட்டுக்குள் இரு கொள்ளையர்கள் நித்திரைகொள்வதை கவனித்துவிட்டு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக அங்கு விரைந்து வந்த காவல்துறையினர், முன்னதாகவே Val d’Oise பகுதி காவல்துறையினரால் நன்கு அறிந்த இரு கொள்ளையர்களையும் கைது செய்துள்ளனர்.
tags :- France police arrested thieves stolen things did home
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
- பிரான்ஸ் ரயிலில் நிறைமாத கர்ப்பிணிக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்!
- டொரோண்டோ துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்கள் அடையாளம் காணப்பட்டார்!
- பிரான்ஸில், காவற்துறை அதிகாரி சேவைத்துப்பாக்கியை மறந்ததால் நடந்த துயர சம்பவம்!
- யாஷிகாவின் கட்டில் போர்வைக்குள் இருந்த மஹத்தின் உள்ளாடை! கண்டெடுத்த கார்த்தி.