(tamil news sri lankan police request karu jaya inquiry vijayakala)
நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனிடம் விசாரணைகளை மேற்கொண்டு வாக்குமூலம் பெற்றுக்கொள்ளும் நோக்கில் சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம் பொலிஸார் அனுமதி கோரியுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இந்த மாத ஆரம்பத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டமொன்றில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் உருவாக்கப்பட்டால் நன்றாக இருக்கும் என்று கூறிய கருத்துத் தொடர்பாக கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை இடம்பெற்றது.
இந்த நிலையில் பொலிஸார் தமது தரப்பு விசாரணைகளை மேற்கொள்வதற்காக இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர்.
விஜயகலா மகேஸ்வரனின் உரை தொடர்பாக இதுவரை 40 பேரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும், சபாநாயகரின் அனுமதியுடனேயே விஜயகலா மகேஸ்வரனிடம் விசாரணை நடாத்தப்பட வேண்டும் என்பதால் அவரிடம் வாக்குமூலம் பெறுவதற்குக் காவல்துறையினர் அனுமதி கோரியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
(tamil news sri lankan police request karu jaya inquiry vijayakala)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- இலங்கையில் இறப்பு வீதம் அதிகரிப்பு
- இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து; பலர் காயம்
- சிங்களத் தாயின் கண்ணீரை துடைத்த தமிழ் இளைஞர்கள்; மனதை நெகிழ வைக்கும் சம்பவம்
- மரண தண்டனை பெயர் பட்டியலை வெளியிட்ட அதிகாரியை பணிநீக்க நடவடிக்கை
- சிறைக்கூடத்தில் இருந்து பாதாள உலகக் கோஷ்டியை தொடர்புகொண்ட அலோசியஸ்; தகவல் அம்பலம்
- க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
- 100 பவுண் நகைகளை கொள்ளையடித்த இலங்கை அகதி
- முஸ்லிம் வர்த்தகர்களுக்கு எதிராக சிங்கள வர்த்தகர்களை தூண்டிவிட சிலர் முயற்சி
- மஹிந்த ராஜபக்ச புதுடெல்லிக்கு விஜயம்; சுப்பிரமணிய சுவாமி அழைப்பு