விஜயகலா எம்.பியை விசாரிக்க பொலிஸார் சபாநாயகரிடம் அனுமதி கோரல்

0
462
tamil news sri lankan police request karu jaya inquiry vijayakala

(tamil news sri lankan police request karu jaya inquiry vijayakala)

நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனிடம் விசாரணைகளை மேற்கொண்டு வாக்குமூலம் பெற்றுக்கொள்ளும் நோக்கில் சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம் பொலிஸார் அனுமதி கோரியுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இந்த மாத ஆரம்பத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டமொன்றில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் உருவாக்கப்பட்டால் நன்றாக இருக்கும் என்று கூறிய கருத்துத் தொடர்பாக கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை இடம்பெற்றது.

இந்த நிலையில் பொலிஸார் தமது தரப்பு விசாரணைகளை மேற்கொள்வதற்காக இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர்.

விஜயகலா மகேஸ்வரனின் உரை தொடர்பாக இதுவரை 40 பேரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும், சபாநாயகரின் அனுமதியுடனேயே விஜயகலா மகேஸ்வரனிடம் விசாரணை நடாத்தப்பட வேண்டும் என்பதால் அவரிடம் வாக்குமூலம் பெறுவதற்குக் காவல்துறையினர் அனுமதி கோரியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

(tamil news sri lankan police request karu jaya inquiry vijayakala)

 

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites