மைத்திரிபால சிறிசேன உடனடியாக விலக வேண்​டும் – டிலான் பெரேரா

0
430
tamil news dilan perara request maithrepala resign unp soon

(tamil news dilan perara request maithrepala resign unp soon)

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆசிர்வாதம் இருந்தால் மாத்திரமே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் சுதந்திர கட்சியின் சார்பில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக போட்டியிட முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்திலிருந்து விலகியுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 16 பேர் கொண்ட குழு இந்த யோசனையை தெரிவித்துள்ளது.

புஞ்சிபொரளையில் உள்ள சுதந்திர ஊடக கேந்திர நிலையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய முன்னாள் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா இதனை தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆசிர்வாதத்தைப் பெற்றுகொள்ள வேண்டுமானால், ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கத்திலிருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உடனடியாக விலக வேண்​டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

(tamil news dilan perara request maithrepala resign unp soon)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites