கட்சியின் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியும் மக்களுக்காகவும் எனது அமைச்சுப் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளேன் என்று சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். Minister Vijayakala Maheswaran Resigning Ministry Reason
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
யாழ்.குடாநாட்டில் வன்முறைகளும் குற்றச்செயல்களும் அதிகரித்துள்ளன. ஆறு வயது சிறுமி படுகொலை செய்யப்பட்டுள்ளார். 59 வயதான வயோதிப பெண் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் வீட்டில் கொள்ளையும் இடம்பெற்றுள்ளது. வாள்வெட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. போதைவஸ்து பாவனையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இவ்வாறான நிலையில் மக்களின் துன்பங்களை தாங்க முடியாது புலிகளின் காலத்தை நினைவூட்ட வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
ஆறு வயது சிறுமியின் படுகொலை உட்பட வன்முறைகள் குடாநாட்டில் அதிகரித்து வருவதனால் மக்கள் அச்சத்தின் மத்தியில் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. மக்கள் நிம்மதியின்றி வாழ்கின்றனர். இந்த நிலையில் மக்களின் துன்பங்களை வெளிக்கொணர வேண்டியது அவர்களது பிரதிநிதியான எனது கடமையாகும். இதனால் தான் மக்களின் துன்பங்களை வெளிக்கொண்டு வரும் வகையில் எனது கருத்தினை தெரிவித்திருந்தேன்.
கடந்த செவ்வாய்க்கிழமை பிரதமரும் கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க நான் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்தபோது என்னுடன் தொடர்பு கொண்டு எனது கருத்து குறித்து கலந்துரையாடினார். இதன்போது எனது நிலைப்பாட்டினை அவருக்கு விளக்கி கூறினேன்.
தற்போது எனது உரை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளமையால் கட்சியின் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் தற்காலிகமாக அமைச்சு பதவியிலிருந்து விலகுவதற்கு நான் தயார் என்றும் பிரதமரிடம் எடுத்து கூறினேன். இதற்கிணங்கவே எனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்துள்ளேன்.
மக்களின் துன்பங்களை எடுத்துக்கூற முயன்றேன். இதனால் தென்பகுதியில் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளதனால் எனது அமைச்சுப்பதவியை மக்களுக்காக மகிழ்ச்சியுடன் இராஜினாமா செய்துள்ளேன் என கூறியுள்ளார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது புதிய வகை எரிபொருள்!
- விடுதலைப் புலிகள் மீண்டும் உருவாக வேண்டும் : விஜயகலா அறைகூவல் (UPDATE 1)
- உடலுறவால் வந்த விபரீதம்; பாட்டியை அடித்துக்கொன்ற பேத்தி; கட்டுகஸ்தோட்டையில் சம்பவம்
- யாழில் மற்றுமொரு பயங்கரம் : கணவன் கண் முன்னே மனைவி கொடூரமாக வன்புணர்வு
- ராஜபக்ஷ மீது நியூயோர்க் ரைம்ஸ் போட்ட குண்டு : கொந்தளிக்கிறது கொழும்பு அரசியல்
- விஜயகலா பூகம்பம் : பாராளுமன்றில் வெடித்தது
- விஜயகலா விளக்கமளிக்க வேண்டும் : ஐ.தே.க. கண்டனம்
- விஜயகலாவுக்கு எதிராக ஜனாதிபதி மைத்திரி அதிரடி உத்தரவு
- விஜயகலாவை தற்காலிக பதவி நீக்குமாறு பிரதமர் ஜனாதிபதியிடம் கோரிக்கை
- மஹிந்தவை மீண்டும் கொட்டிய தேள்!
- மந்திரவாதி என வீட்டிற்குள் நுழைந்து பெண்களை வன்புணர்வுக்கு உட்படுத்திய காமுகன்!!! : களுத்துறையில் சம்பவம்…