லைக்கா நிறுவனம் தயாரிப்பில் இலங்கையில் உருவாகியிருக்கும் ‘ராணி’ திரைப்படம் இன்று ரிலீஸ்

0
105

அசோக அந்தகம இயக்கத்தில் லைக்கா புரடக்ஷ்ன்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் முதல் இலங்கைச் சிங்களத் திரைப்படம் ராணி. இத்திரைப்படம் மனோராணி மாரிமுத்துவின் வாழ்க்கையைக் கூறும் படமாக அமைந்துள்ளது.

மகனை இழந்த ஒரு தாயின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. அண்மையில் இப்படத்தின் ட்ரெய்லெர் வெளியாகி வைரலானது. இந்நிலையில் இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.