(Ranil Wickremesinghe said efforts regulate drug trade successful)
போதைப்பொருட்களை விநியோகிக்கும் வலைப்பின்னலை முடக்குவதன் மூலம் போதைப்பொருள் வர்த்தகத்தை கட்டுப்படுத்தும் முயற்சி வெற்றி பெற்றுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இப்பாகமுவ மாவட்ட செயலகத்தின் புதிய கேட்போர் கூடத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றிய போதே பிரதமர் இந்த கருத்தை வெளியிட்டார்.
போதைப்பொருள் பாவனை காரணமாக இன்று சிறு பிள்ளையும் வீதியில் நடந்து செல்ல முடியாத நிலை உருவாகியிருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
முன்னைய அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் போதைப்பொருள் வர்த்தகம் முடக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.
ஆனால் அன்று போதைப்பொருள் இடை விநியோகஸ்தர்கள் மாத்திரம் சட்டத்தின் பிடியில் சிக்க வைக்கப்பட்டார்கள்.
பெருமளவில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கு அரசியல் ரீதியாக பாதுகாப்பு அளிக்கப்பட்டது என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குற்றம்சுமத்தினார்.
ஆனால் தமது அரசாங்கத்தில் எந்தவொரு நபரும் தராதரம் பாராது சட்டத்தின் பிடியில் சிக்கியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் அமைச்சர் துமிந்த திசாநாயக்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
(அரசாங்க தகவல் திணைக்களம்)
(Ranil Wickremesinghe said efforts regulate drug trade successful)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- சம்பளம் வேண்டாம் ; நான் தூக்கிலிடத் தயார்
- பஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பில் புதிய அறிவிப்பு
- புற்றுநோயை ஏற்படுத்தும் பூச்சிநாசினிக்கான தடையை நீக்க நடவடிக்கை
- பெற்றோரை பயமுறுத்துவதற்காக கடிதம் எழுதிவிட்டு மாணவன் தற்கொலை
- கொள்ளுப்பிட்டி – தெஹிவளை கடல்பரப்பில் புதிய கடற்கரைப் பூங்கா
- முஸ்லிம்கள் மக்கள் வாக்களிப்பார்கள், பொது பலசேனாவின் ஆதரவாளர் நானில்லை – கோட்டாபய நம்பிக்கை
- பலம்வாய்ந்த பாதாள உலக கோஷ்டியை உருவாக்கத் திட்டம்