யாழ்ப்பாணம் கொக்குவில் ஞானபண்டிதா பாடசாலைக்கு அருகிலுள்ள வீடு மற்றும் வண்ணார்பண்ணை கிராம அலுவலர் பணிமனை என்பனவற்றின் மீது நேற்று முன்தினம் பகல் வாள்களுடன் வந்தவர்களால் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
தாக்குதலாளிகள் இலக்கத் தகடுகள் மறைக்கப்பட்ட உந்துருளியிலேயே வந்திருந்தனர்.
இந்தச் சம்பவங்களின் பின்னர் கொக்குவில் பகுதியிலிருந்து இலக்கத் தகடுகள் மறைக்கப்பட்ட உந்துருளி ஒன்று பொலிஸாரால் மீட்கப்பட்டது.
உந்துருளியின் இலக்கத் தகட்டு இலக்கத்தின் அடிப்படையில் பொலிஸார் விசாரணை முன்னெடுத்தனர்.
உந்துருளி வவுனியாவில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது.
இலக்கத் தகடுகள் துணியால் மூடிக்கட்டி மறைக்கப்பட்ட நிலையில் கொக்குவிலில் நேற்றுமுன்தினம் மீட்கப்பட்ட உந்துருளியின் உரிமையாளர் கோப்பாயில் நேற்றுக் கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- வடமராட்சியில் மீனவரின் படகை தீ வைத்த விஷமிகள்
- மத்தல விமான நிலையத்தினால் மாதாந்தம் 2500 இலட்சம் ரூபா செலவு
- வெளிநாடுகளுக்கு சென்று திரும்பாத பேராசிரியர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
- கள்ளக் காதலியை வெட்டிக் கொலை செய்த நபர் வசமாக மாட்டினார்
- மாணவர்களுக்கு மகிழ்ச்சிகரமான செய்தி; இரண்டாம் தவணை நிறைவு
- கேப்பாப்புலவு இராணுவ முகாம் முன்பாகவிருந்த பெட்டிக்கடை அகற்றல்
- பாலத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு