காலிறுதியில் போராடி வென்றார் மலெக் ஜெசிரி!

0
661
istanbul open 2018 Malek Jaziri news Tamil

(istanbul open 2018 Malek Jaziri news Tamil)

துருக்கியின் – இஸ்தான்புல் நகரில் நடைபெற்று வரும் இஸ்தான்புல் பகிரங்க டென்னிஸ் தொடரின் அரையிறுதிக்கு துன்சியாவின் மலெக் ஜெசிரி தகுதிபெற்றுள்ளார்.

இஸ்தான்புல் பகிரங்க டென்னிஸ் தொடர் ஏப்ரல் 30ம் திகதி ஆரம்பமாகி மே 6ம் திகதிவரை நடைபெறவுள்ளது.

இந்த போட்டித் தொடரின் காலிறுதிப்போட்டியில், துன்சியாவின் மலெக் ஜெசிரி, செக்குடியரசின் ஜிரி வெஸ்லியை எதிர்கொண்டு விளையாடினார்.

போட்டியின் ஆரம்பத்தில் தடுமாற்றத்தை எதிர்கொண்ட ஜெசிரி முதல் செட்டில் தோல்வியடைந்த போதிலும், அடுத்த இரண்டு செட்களையும் கைப்பற்றி 2-1 என வெற்றிபெற்று, அரையிறுதிக்கு முன்னேறினார்.

முதல் செட்டில் அபாரமாக ஆடிய ஜிரி வெஸ்லி 6-3 என வெற்றியுடன் போட்டியை ஆரம்பித்தார். எனினும் அடுத்த இரண்டு செட்களிலும் தடுமாற்றத்தை எதிர்கொண்ட நிலையில், 6-4 மற்றும் 6-1 என இரண்டு செட்களையும் ஜெசிரி கைப்பற்றி வெற்றியை தக்கவைத்தார்.

அரையிறுதிக்கு முன்னேறியுள்ள ஜெசிரி, இன்று சேர்பிய வீரர் லெஸ்லோ டெரியை எதிர்கொள்ளவுள்ளார்.

<<Tamil News Group websites>>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here