இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 58ஆவது போட்டி தரம்ஷாலா மைதானத்தில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் டெல்லி கெப்பிடல்ஸ் அணியும் மோதின.
இரவு 7.30க்கு ஆரம்பமான குறித்த போட்டி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தியா – பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் நிலவும் பதற்றநிலை காரணமாக குறித்த போட்டி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
வீரர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி தரம்ஷாலா மைதானத்தில் விளக்குகள் அணைக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.