கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் காணிகளை அபகரிக்கும் திட்டத்தை வகை வகையாக செயற்படுத்தி வரும் முஸ்லிம் தரப்புகள் மீண்டும் ஒரு பாரிய திட்டம் மூலம் தமது எண்ணத்துக்கு வழிகோலியுள்ளனர். Eravur Pullumalai Tamil Traditional Lands Illegally Takeover Issue
அந்த வகையில் ஏறாவூர் பிரதேச சபைக்கு உட்பட்ட புல்லுமலையில் தனியார் காணி என்று கூறி சுமார் 100 ஏக்கர் காணியை அடைத்து அதில் குடிநீர் போத்தல் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை நிறுவும் முயற்சியில் முஸ்லிம் இனவாத அமைச்சர் ஹிஸ்புல்லா பெரும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
இந்த பாரிய தொழிற்சாலைக்கு சவூதி அரேபியாவின் நிதி உதவிகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
ஆனால் குறித்த தொழிற்சாலை அமைப்பதற்கான அனுமதியை செங்கலடி பிரதேச செயலாளரோ அல்லது அரசாங்க அதிபரோ வழங்கவில்லை என்பதுடன் தொழிற்சாலை அமைப்பதற்கான எந்த விதமான அனுமதிகளும் பெறப்பட வில்லை என தெரியவந்துள்ளது.
அதுமட்டுமன்றி குறித்த தொழிற்சாலை அமையும் போது பிரதேசத்தின் ஒட்டுமொத்த நீர்வளமும் பாதிக்கப்படும் என சூழலியல் அக்கறையாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். எனினும் இவற்றை எல்லாம் பொருட்படுத்தாது ஹிஸ்புல்லா காணியை அபகரிப்பு செய்வதிலேயே முழு மூச்சாக உள்ளார்.
காலம் காலமாக தமிழ் மக்களால் ஆளப்பட்டு வரும் பாரம்பரிய நிலங்களை சவூதி போன்ற வெளிநாட்டு சக்திகளின் உதவியுடன் அபகரிப்பு செய்யும் திட்டமிட்ட சதி வேலைகளுக்கு முடிவு தான் என்ன?
இது தொடர்பில் கிழக்கு தமிழ் தரப்புகள் சரியான முறையில் நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில் முஸ்லிம் இனவாதிகளிடம் கிழக்கை தாரைவார்த்து கொடுக்க வேண்டிய நிலைமை உருவாகும். இது தொடர்பில் தமிழ் மக்கள் சிரத்தையுடன் சிந்திக்க வேண்டிய தருணம் இதுவே.
ஏனைய செய்திகள்
பிரபாகரன் என்னும் ஒற்றை சொல்லில் ஒளிந்திருக்கும் மாற்ற முடியாத தலைமைத்துவம்!
கருணாவின் காட்டி கொடுப்புக்கு கூட்டி கொடுத்த அலிசாஹிர் மௌலானாவுக்கு கிடைத்த பரிசு!
முஸ்லிம்களின் காட்டி கொடுப்புக்கு இலங்கை அரசின் கைமாறு கலவரமா?
முஸ்லிம் அரசியல்வாதிகளின் வாய்வீரத்துக்கு பலிகொடுக்கப்படும் முஸ்லிம்களின் எதிர்காலம்!
இலங்கையின் கல்வித்துறைக்கு தனியார் கல்வி உயர் கல்வி நிறுவங்கள் பெரிதும் பங்களிக்கின்றன – ரிஷாட்