பதவியை இராஜினாமா செய்யும் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ

0
56

நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடுவதற்காக அவர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேவேளை ஏற்கனவே சஜித் பிரேமதாச, அநுர குமார திசாநாயக்க, திலித் ஜயவீர, சரத் பொன்சேகா ஆகியோர்கள் தாங்கள் ஜனாதிபதி வேட்பாளர்கள் என்று அறிவித்துள்ளனர். இந்த நிலையில் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ இராஜினாமா செய்யவுள்ளதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.