ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்றார் பொன்சேகா: உத்தியோகபூர்வமாக அறிவிப்பு

0
63

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

தனது X தளத்தில் விடுத்துள்ள பதிவொன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அந்த பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “ஜனாதிபதி பதவிக்கான எனது வேட்புமனுவை இலங்கை மக்களுக்கு அறிவிக்க விரும்புகிறேன்.

76 ஆண்டுகளாக எங்களை திவாலாக்கும் நிலைக்குத் தள்ளிய ஒரு திறமையற்ற அரசியல் குழுவால் நாங்கள் வழிநடத்தப்பட்டோம். இலங்கை வளர்ச்சியடைய வேண்டுமானால் ஊழலை நசுக்க வேண்டும். வருமானத்தை அதிகரிக்க நமது இயற்கை வளங்களைப் பயன்படுத்த வேண்டும்.

2024 ஜனாதிபதித் தேர்தலில் இலங்கையின் ஜனாதிபதி வேட்பாளராக இது எனது முறையான மற்றும் உத்தியோகபூர்வ அறிவிப்பு” என்று பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கையை முன்னோக்கி கொண்டு செல்ல ஒவ்வொரு இலங்கையர்களையும் தன்னுடன் இணையுமாறு அவர் அழைப்பு விடுத்தார்.