காரணம் கூறி ஜனாதிபதி தேர்தலை பிற்போட வேண்டாம்; சட்டத்தரணி சுமந்திரன் கருத்து

0
76

நிரந்தர காவல்துறைமா அதிபர் இல்லாததைக் காரணம் காட்டி, ஜனாதிபதி தேர்தலை பிற்போடக் கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், இந்த விடயம் தொடர்பில் அவசரமாக இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஆராயப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.