ஊடகவியலாளர்களுக்கு தபால் மூலம் வாக்களிக்கும் உரிமை: இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார கோரிக்கை

0
58

ஊடகவியலாளர்களுக்கு தபால் மூலம் வாக்களிக்கும் உரிமையை வழங்குமாறு கோரிக்கை வெகுசன ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்தார்.

இலங்கையில் 17 தொலைக்காட்சி அலைவரிசைகளும் 52 வானொலி அலைவரிசைகளும் உள்ளதாக சுட்டிக்காட்டிய அவர் இந்த நிறுவனங்களில் பணியாற்றும் ஊடகவியலாளர்கள் கடமையில் ஈடுபட்டுள்ளதால் வாக்களிக்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

“எனவே ஊடகவியலாளர்களுக்கு தபால் மூல வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட வேண்டுமென நான் முன்மொழிகிறேன்” வெகுசன ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார மேலும் தெரிவித்தார்.