பொதுஜன பெரமுன தலைவர்கள் 12 பேர் இரகசிய பேச்சு

0
27

ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைத் தவிர வேறு வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டால் அதனை எதிர்த்து ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 12 மாவட்ட தலைவர்கள் தீர்மானித்துள்ளதாக கொழும்பு அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பான விசேட கலந்துரையாடல் கொழும்பு மலலசேகர மாவத்தையில் உள்ள இராஜாங்க அமைச்சர் ஒருவரின் இல்லத்தில் நேற்று (22) இரவு இடம்பெற்றதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

கட்சி வேறு வேட்பாளரை நியமித்தால், பெரும்பான்மைக் கருத்துக்கு எதிராகச் சென்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவைத் தெரிவிக்க அவர்கள் தீர்மானித்துள்ளதாகவும் அறியமுடிகின்றது.

மேலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் பிரசாரத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான அமைப்பு ரீதியான செயற்பாடுகளை மாவட்ட மட்டத்தில் அந்த சபை உறுப்பினர்களுடன் தொடர்பு கொண்டு முன்னெடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.