ஊழல்களை அம்பலப்படுத்திய மருத்துவர் அர்ச்சுனா; நன்றி கூறும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்

0
64

மாகாண நிர்வாகம் கூறுபவற்றை மாகாண நிர்வாகத்திற்கு உட்பட்ட அமைப்புக்கள் கேட்க வேண்டும் என்பதுடன் அதன் பிரகாரம் செயற்பட வேண்டும் எனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் (2024.07. 20) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். சாவகச்சேரி வைத்தியசாலையின் நியமனங்களும் மாற்றங்களும் மாகாணத்திற்க உரித்தாக இருந்தால் மாகாண மட்டத்தில் செயற்படுத்தப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், கொழுப்பிலுள்ள அமைச்சர்கள் அமைச்சின் அதிகாரிகள் இதனை புரிந்து கொண்டு செயற்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.