தமிழீழ இராணுவ இயக்கத்தின் தலைவர் த. மகேஸ்வரன் காலமானார்!

0
87

தமிழீழ ராணுவம் (TEA) இயக்கத்தின் தலைவர் தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் அவர்கள் மரணமடைந்திருப்பதாக முகநூலில் தோழன் பாலன் என்பவர் தகவலை பதிவிட்டுள்ளார்.

தமிழீழ இராணுவம் என்பது இலங்கையில் செயலிழந்த தமிழ் பிரிவினைவாதக் குழுவாகும். இது பனாகொட த.மகேஸ்வரனால் நிறுவப்பட்டது.

லண்டனில் படிப்பை பாதியில் விட்டிட்டு தாய் நாட்டிற்காக போராட வந்தவர். இலங்கையிலும் இந்தியாவிலும் நீண்ட காலம் சிறை வைக்கப்பட்டவர். பனாகொடை இராணுவ முகாமில் இருந்து தப்பியவர் பின்னர் மட்டக்களப்பு சிறையுடைப்பை நடத்தியவர் என்பது குறிப்பிட்டத்தக்கது.