பங்களாதேஷில் அரச தொலைக்காட்சிக்கு தீ வைத்த ஆர்ப்பாட்டக்காரர்கள்!

0
49

பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் உள்ள பங்களாதேஷ் தேசிய தொலைக்காட்சி தலைமையகத்திற்கு தீ ஆர்ப்பாட்டக்காரர்கள் வைத்தனர். பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து அங்கு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுள்ளது.

அத்துடன் போராட்டக்காரர்கள் தொலைக்காட்சி வளாகத்திற்குள் நுழைந்து பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் ஊழியர்களைத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

தேசிய தொலைக்காட்சிக்கு சொந்தமான கட்டிடம் தீப்பிடித்ததில், ஏராளமானோர் அதற்குள் சிக்கிக் கொண்டனர். இந்நிலையில் தீயை அணைக்கவும், மக்களை மீட்கவும் தீயணைப்பு வீரர்கள் மிகுந்த சிரமப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.