டிரம்புக்கு யாகம் வளர்த்து சிறப்பு பூஜை செய்த இந்து அமைப்பினர்!

0
216

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீதான கொலை முயற்சியை தொடர்ந்து, டெல்லியின் இந்து சேனா அமைப்பினர் அவரது நலம் மற்றும் நீண்ட ஆயுளுக்காக ‘சிறப்பு ஹோமம்’ நடத்தினர்.

இந்திய தலைநகர் டெல்லியில் உள்ள தில்ஷத் கார்டனில் உள்ள மா பக்லமுகி சாந்தி பீடத்தில், 1.25 லட்சம் புனித மஹாமிருத்யுஞ்சய் மந்திரத்தை உச்சரிக்கும் மகாமிருத்யுஞ்சய் ஜப ஹோம யாகத்தை பூசாரிகள் நடத்தியுள்ளனர்.

இந்த மந்திரம் நோயை குணப்படுத்தி, தீய சக்திகளிடம் இருந்து பாதுகாப்பு வழங்கும் பண்புகளை கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது.

இதுதொடர்பாக இந்து சேனாவின் செய்தி தொடர்பாளர், முன்னாள் அமெரிக்க அதிபரின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு குறித்து தங்களுக்கு கவலைகள் இருப்பதாகவும், அவருக்கு உதவ தெய்வீக தலையீடு தேவை என்றும் தெரிவித்துள்ளார்.