42 பெண்களை கொலை செய்த சைக்கோ கொலையாளி! நடுங்க வைத்த சம்பவம்

0
56

கென்யாவில் தனது மனைவி உட்பட 42 பெண்களை கொடூரமாக கொன்று புதைத்த வழக்கில் ஜோமைசி கலிசியா (33) கைது செய்யப்பட்டுள்ளார். கைவிடப்பட்ட குவாரி குப்பை கிடங்கில் அடுத்தடுத்து சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் கென்யாவை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

குவாரிக்கு அருகில் உள்ள குற்றவாளியின் வீட்டில் பொலிஸார் நடத்திய சோதனையில் 10 செல்போன்கள், லேப்டாப், அடையாள அட்டைகள் மற்றும் பெண்களின் உடைகள், கொலைக்கு பயன்படுத்திய கத்தி, உடலை அப்புறப்படுத்த பயன்படுத்திய 9 சாக்கு மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்ட அவர், தனது மனைவியின் கொலையில் தொடங்கி 42 பெண்களைக் கொன்று அவர்களின் உடல்களை கைவிடப்பட்ட குவாரியில் வீசியதை ஒப்புக் கொண்டார். இது குறித்து பொலிஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.