இரா.சம்பந்தன் மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல்

0
46

இலங்கையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எம்.பி.யுமான இரா.சம்பந்தன் மறைவுக்கு தமிழக அரசியல்வாதியும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தனது சமூகவலைத்தள பக்கத்தில்,

இலங்கைத் தமிழர் அரசியல் வரலாற்றில் மறக்க முடியாதவரும் மறுக்க முடியாதவருமாகிய ஈழ தமிழ்ச் சமுகத்தின் மிகப்பெரும் தூணாகத் திகழ்ந்தவரும் ஆன இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் (Rajavarothiam Sampanthan) ஐயா அவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (30.6.2024) இரவு 11 மணியளவில் தனது 91 வது வயதில் கொழும்பில் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தம் அடைந்தேன் என பதிவிட்டுள்ளார்.