21 பேரின் உடல்கள் ஒரே இடத்தில் தகனம்; சோகத்தில் மூழ்கிய கிராமம்

0
595

தமிழகத்தின் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்த 21 பேரின் உடல்கள் ஒரே இடத்தில் தகனம் செய்யப்பட்ட சம்பவம் கிராமத்தையே சோகத்தில் மூழ்கடித்துள்ளது.

கள்ளக்குறிச்சி – கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்த நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட இதுவரை 49 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியதோடு, பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆறுதலும் தெரிவித்தனர்.

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் 21 பேரின் உடல்கள் கோமுகி ஆற்றங்கரையோரம் ஒரே இடத்தில் தகனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டன. வத்திப்பெட்டி போல் கட்டைகளை வைத்து வரிசையாக தகனம் செய்ய இடம் அமைக்கப்பட்டது.

இறுதி ஊர்வலம் தொடங்கிய போது மழை பெய்ததால், உடல்களை தகனம் செய்வதில் தாமதம் ஏற்பட்டது. மீண்டும் இறுதிச்சடங்குக்கான ஏற்பாடுகள் நடைபெற்றது.

தொடர்ந்து ஒவ்வொருவரின் உடல்களாக தகனம் செய்யப்பட்டன. இந்நிலையில் கள்ளச்சாரயல் அருந்து ஒரேகிராமத்தில் பலர் பலியாகியுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.